Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 முறை கற்பழிக்கப்பட்ட சிறுமி: பள்ளியிலேயே அரங்கேறிய வக்கிரம்!

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (19:47 IST)
அமெரிக்காவில் 12 வயதான சிறுமி ஒருவர் பள்ளி ஊழியர் ஒருவரால் பாலியல் அடிமை போல நடத்தப்பட்டு 40 முறை கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.
 
தற்போது 20 வயதான மாணவி ஒருவர் அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள பள்ளி ஒன்றின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். குறித்த அந்த பள்ளியில் காப்பாளராக 39 வயதான அம்பியோரிக்ஸ் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
 
அவர் அந்த மாணவி 12 வயதாக இருக்கும் போது பள்ளியின் தனியான அறை ஒன்றில் வைத்து 40 முறை கற்பழித்துள்ளார். குறித்த இந்த வக்கிர சம்பவம் அந்த பள்ளி நிர்வாகத்திற்கு தெரியும். ஆனால் அவர்கள் இந்த சம்பவத்தை மூடி மறைத்துள்ளனர். எனவே பள்ளி மீது வழக்கு தொடர்ந்துள்ளார் அந்த மாணவி.
 
இந்த நபர் கடந்த 2004-ஆம் ஆண்டு பணி நேரத்தில் மது அருந்தியதை கண்டு பொறியாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர் தான் இந்த பலாத்கார சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்