Publish Date: Thu, 12 Aug 2021 (23:34 IST)
Updated Date: Thu, 12 Aug 2021 (23:37 IST)
உலகில் தலைசிறைந்த இணையதள தேடு பொறியாக கூகுள் உள்ளது. இதில் ஒரு புதிய கொள்கையை அவிரைவில் அமல்படுத்தவுள்ளது.
இணையதளத்தில் கூகுள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தத் தேடுபொறியைப் பய்ன்படுத்துவோருக்கு வயது வித்தியாசம் இல்லை; சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக தற்போது ஆன்லைன் கல்வி நடைபெறுவதால் மாணவர்கள் கூகுள் கேட்ஜை பயன்பத்தி வருகின்றனர்.
இதில், குழந்தைகளும் பய்ன்படுத்துவதால் இதுகுறித்த வௌயது வரம்பு நிர்ணயிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், கூகுள் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பயனர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தயாரிப்புகளை உருவாக்க உள்ளதாகவும், 13 வயதிற்குக் கிழே உள்ளவர்களால் இதில் நிரந்தர கணக்கு உருவாக்க முடியாது எனவும் 18 வயதிற்குக் கீழே உள்ளவர்களுக்கு சில கொள்கைகள் உருவாக்கபபடுவதாகத் தெரிவித்துள்ளது.