Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் 26 அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றார் அதிபர்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (12:26 IST)
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை ஆளும் கட்சி பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

 
இலங்கை பிரதமர் ராஜபக்ச நேற்று ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது என்பதும் அந்த தகவலுக்கு பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்தது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
புதிய அமைச்சர் நியமனம் செய்யப்படுவார்களா? அல்லது இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுமா என்பது குறித்த தகவல் ஊடகங்களில் பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை ராஜிநாமா செய்துளளதாகக் கூறியுள்ளார்.
 
இலங்கை அமைச்சர்கள் பதவிகலைத் தொடர்ந்து தாமும் தமது பதவியில் இருந்து விலகுவதாகவும் அதற்கான கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை ஆளும் கட்சி பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இலங்கையில் 26 அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றார் அதிபர் கோட்டாபய ராஜபக்ச. அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களுடன் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்த நிலையில் இந்த ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments