Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க பள்ளியில் திடீர் துப்பாக்கிச்சூடு! – 14 குழந்தைகள் பலி!

Webdunia
புதன், 25 மே 2022 (08:26 IST)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிறு குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகமாக உள்ள நிலையில் ஆங்காங்கே அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாசில் உவால்டே பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது.

இங்கு வழங்கம்போல மாணவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென பள்ளிக்குள் புகுந்த 18 வயதுடைய நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் பல மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் மீது அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் அவர் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உவால்டே பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments