Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க பள்ளியில் திடீர் துப்பாக்கிச்சூடு! – 14 குழந்தைகள் பலி!

World
Webdunia
புதன், 25 மே 2022 (08:26 IST)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிறு குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகமாக உள்ள நிலையில் ஆங்காங்கே அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாசில் உவால்டே பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது.

இங்கு வழங்கம்போல மாணவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென பள்ளிக்குள் புகுந்த 18 வயதுடைய நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் பல மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் மீது அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் அவர் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உவால்டே பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

க்ரீன் கார்டு வைத்திருந்தாலும் வெளியேற்றலாம்.. அமெரிக்க நீதிமன்ற உத்தரவால் இந்தியர்கள் அதிர்ச்சி..!

தொடர் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம்..!

டாடா, அம்பானி கூட செய்யாத சாதனை.. ஒரே நேரத்தில் 50000 ஊழியர்களுக்கு பதவி உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments