Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற பெண்.. எளிமையாக நடந்த பதவியேற்பு விழா..!

Siva
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (18:14 IST)
சமீபத்தில் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க அதிபராக வெற்றி பெற்று பதவியேற்ற நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவி ஏற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழா இன்று எளிமையாக நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் மூத்த தலைவர் மற்றும் பேராசிரியர் ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவியேற்றதை அடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டு வருகின்றன. கடந்த 1994 ஆம் ஆண்டு, இலங்கையில் பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க இருந்த நிலையில், அதன்பின் அடுத்த பெண் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தன சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஹரிணி அமரசூரிய பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த பல ஆண்டுகளாக, அநுர குமார திஸாநாயக்கன் கட்சிக்கு, தேசிய மக்கள் சக்தி கட்சியில் ஹரிணி அமரசூரிய இருந்து வருகிறார். மேலும், ஆட்சிக்கு வந்தால் ஹரிணி அமரசூரிய தான் பிரதமர் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments