Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 6-ல் விஜய்மல்லையா இந்தியாவிடம் ஒப்படைப்பா?

Webdunia
புதன், 14 ஜூன் 2017 (05:43 IST)
இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன் பெற்றுவிட்டு இங்கிலாந்துக்கு தப்பிச்சென்றுவிட்ட பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையாவின் ஜாமீன் வழக்கு நேற்று லண்டனில் விசாரணைக்கு வந்தது.  வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜூலை 6ஆம் தேதிக்கு வழக்கை  ஒத்திவைத்தனர். மேலும் அன்றைய தினம் விஜய்மல்லையா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.



 


ஜூலை 6ஆம் தேதி விஜய்மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதா? என்பது குறித்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் அவ்வாறு ஒரு உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தால் லண்டன் உள்துறை செயலாளர் விஜய்மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.

இந்த நிலையில் நீதிமன்ற வாசலில் இந்திய ஊடகங்களுக்கு பேட்டி அளித்த விஜய் மல்லையா, 'என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. நான் குற்றம் ஏதும் செய்யவில்லை, நிரபராதி என நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று விஜய் மல்லையா கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தீண்டாமையா? பீகார்ல நடக்குறதை பேச தில் இருக்கா ஆளுநரே? - அமைச்சர் பதிலடி!

பூமி பூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை: செல்லூர் ராஜூ கிண்டல்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல் ஒரு ஆலயம்.. தெலுங்கானா பக்தர்கள் ஆச்சரியம்..!

ரஜினி பாணியில் இமயமலை சென்ற அண்ணாமலை.. டெல்லி செல்லவும் திட்டமா?

இன்றுடன் நிறைவடையும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்.. ரிசல்ட் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments