Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரியாவில் அமெரிக்க உளவுப்படை தலைவர்: ரகசிய பயணத்திற்கு அவசியம் என்ன?

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2018 (12:38 IST)
வடகொரியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வந்த நிலையில், அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் பகையும், வார்த்தை யுத்தமும் நிலவி வந்தது. 
 
வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால், தென்கொரியாவில் நடந்த குளிர்கால தொடர் இந்த பிரச்சனைகளை மாற்ற முற்பட்டது. 
 
அதன் எதிரொலியாக, அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வடகொரிய அதிபர் கிம் விருப்பம் தெரிவித்தார். டிரம்பும் இதற்கு சம்மதம் தெரிவித்தார். கடந்த 18 ஆண்டுகளில் இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கப்போவது இதுவே முதல் முறை ஆகும்.
இந்நிலையில் டிரம்ப், கிம் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக அமெரிக்க உளவுப்படை சி.ஐ.ஏ.யின் தலைவர் மைக் போம்பியோ வடகொரியாவிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளார். 
 
ஆனால், இந்த தகவல் தற்போது ஊடகங்களில் கசிந்துள்ளது. இந்த ரகசிய பயணத்தின் சில தினங்களுக்கு முன்னர்தான் அமெரிக்க வெளியுறவு மந்திரி பதவியில் இருந்து ரெக்ஸ் டில்லர்சனை நீக்கி விட்டு, அவரது இடத்தில் சி.ஐ.ஏ.யின் தலைவர் மைக் போம்பியோவை நியமிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments