Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்சரிக்கும் டிரம்ப்; அசராத ஈரான்

Webdunia
சனி, 13 ஜனவரி 2018 (20:51 IST)
வல்லரசு நாடுகளுடன் செய்துக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்க முடியாது என ஈரான் உறுதியாக தெரிவித்துள்ளது.

 
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுள்ளதாக வல்லரசு நாடுகள் குற்றம்சாட்டின. ஈரான் மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டது. பின்னர் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்துக்கொண்டது. 
 
இதனால் பொருளாதார தடை படிப்படியாக விலக்கிக்கொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. ஒபாமா ஆட்சிக்காலத்தில் செய்துக்கொண்ட இந்த ஒப்பந்தத்தை கைவிடப் போவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.
 
ஒப்பந்தம் அமலில் இருக்க வேண்டுமானால் ஈரான் மீது கடுமையான நிபந்தனைகள் விதிக்க வேண்டும். ஒப்பந்தத்தில் உள்ள பிழைகளை திருத்த வேண்டும் என்று வலியுறுத்து வருகிறார். இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அதில், தற்போது அல்லது இனி வரும் காலத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்த ஒரு திருத்தம் செய்தாலும் அதை ஈரான் ஏற்றுக்கொள்ளாது. இந்த ஒப்பந்தத்துடன் பிற பிரச்சினைகளை ஒப்பிடுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments