Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைக்காரர்களை மிரட்டி ஏழைகளுக்கு உதவும் மாஃபியா கும்பல் – இத்தாலியில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (15:00 IST)
இத்தாலியில் கொரோனா ஊரடங்கால் உணவு கிடைக்காமல் வாடும் ஏழை மக்களுக்கு அந்த பகுதி மாஃபியா குழுக்கள் உதவுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் பல நாடுகளில் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் ஏழை மக்கள் அன்றான உணவுக்கு அல்லாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக இத்தாலியில் நேப்பிள்ஸ் மற்றும் பலெர்மோ பகுதிகளில் உள்ள அன்றாட வேலை பார்க்கும் ஏழை மக்கள் ஊரடங்கால் பெரிதும் உணவுக்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இத்தாலியில் உள்ள மாஃபியா குழுக்கள் சில அங்குள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றன. ஆனால் அந்த மாஃபியா கும்பல்கள் அதை விலை கொடுத்து வாங்குவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன. அங்குள்ள கடைக்காரர்களை மிரட்டி அவர்களிடமிருந்து பொருட்களை பெற்று மக்களுக்கு அளிப்பதாக பலர் புகார் கூறியுள்ளனர். கொரோனா தடுப்பு பணிகளில் மூழ்கியுள்ள இத்தாலி அரசு இந்த மாஃபியா கும்பல் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments