Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மருந்து கண்டுபிடித்தால் பரிசு – ஜாக்கிசான் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (13:56 IST)
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் தருவதாக நடிகர் ஜாக்கிசான் அறிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 900 பேருக்கும் மேல் இறந்துள்ளனர். உலகெங்கும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் மருந்து கண்டுபிடிக்க தீவிரமாக இறங்கியுள்ளன. பல்வேறு தனியார், பொதுநல அமைப்புகளும் மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் ஆய்வாளர்களுக்கு நிதியுதவி அளித்து வருகின்றன.

இந்நிலையில் பிரபல ஆக்‌ஷன் நடிகர் ஜாக்கிசான் கொரோனா வைரஸுக்கு முறிவு மருந்து கண்டுபிடிப்பவருக்கு 1 மில்லியன் சீன யுவான்களை பரிசாக அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடிக்கும் அதிகமான தொகை இது! ஜாக்கிசான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் மேலும் சில திரை பிரபலங்களும் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிய நிதியுதவி செய்ய முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெருங்கி வருகிறது பெபின்கா சூறாவளி; 100க்கும் மேலான விமானங்கள் ரத்து..!

முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் திருமாவளவன்.. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பாரா?

ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வேன்: பிரசாந்த் கிஷோர்

டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு! கொலை செய்ய முயன்ற மர்ம நபர் யார்?

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments