Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி சூடு; மரணம் என தகவல்!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (09:36 IST)
வெளியான தகவலில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால் ஷின்சோ அபே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நாரா நகரில் உரையாற்றிய போது ஷின்சோ அபே மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் அளித்துள்ளது.
 
இதனைத்தொடர்ந்து வெளியான தகவலில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே 2012 முதல் 2020 வரை ஜப்பானின் பிரதமராக பணியாற்றினார். அபேவின் முதுகுப்பக்கம் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் பெயரில் புதிய ப்ராண்ட்! ட்ரேட்மார்க் விண்ணப்பித்த ரிலையன்ஸ் நிறுவனம்!

லாகூர் தொடர் வெடிகுண்டு வெடிப்பை அடுத்து கராச்சியிலும் குண்டுவெடிப்பு: மக்கள் பீதி..!

பாகிஸ்தான் வாங்கிய சீன ஏவுகணைகள்.. இடையிலேயே வழிமறித்து அழித்த இந்தியா..!

அமைச்சர் ரகுபதியின் துறை துரைமுருகனுக்கு..! அமைச்சரவை இலாகா திடீர் மாற்றம்!

தோல்வி பயத்தால் தற்கொலை செய்த மாணவி.. ஆனால் 413 மதிப்பெண் எடுத்து பாஸ்.. பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments