Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரிசோதனை கூட இல்லை.. மர்ம காய்ச்சலில் சிக்கிய வடகொரியா!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (15:15 IST)
வடகொரியாவில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 14.8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த 2 ஆண்டுகளில் பல நாடுகளிலும் பரவி ஏராளமான மக்களை பலி கொண்டது. ஆனால் அந்த சமயத்திலும் வடகொரியாவில் கொரோனா பாதிப்புகள் பதிவாகாமல் இருந்து வந்தது உலக நாடுகளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

இந்நிலையில் தற்போது வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா பாதிப்புகள் உறுதியாக தொடங்கியுள்ளன. அங்கு ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் நாட்டிற்கே முழு முடக்கம் அறிவித்தார் கிம் ஜாங் அன்.

ஆனால் தற்சமயம் பல வடகொரிய மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு கொரோனா இருக்கிறதா என்பதை அறிய கூட வடகொரியாவில் போதுமான கொரோனா பரிசோதனை கருவிகள் இல்லை என கூறப்படுகிறது.

மேலும் தடுப்பூசிகள், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவையும் வடகொரியாவில் தேவையான அளவு இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வடகொரியாவில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.8 லட்சமாக அதிகரித்துள்ளது. இது கொரோனாவாக இருக்கும் பட்சத்தில் உலக நாடுகளுக்கும் விளைவை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணைய தளத்தில் பார்க்கலாம்?

கர்னல் சோபியா குறித்து சர்ச்சை கருத்து: பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!

இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை நான் விரும்பவில்லை: டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments