Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரை நிறுத்தினால் பாலஸ்தீனுக்கு ரூ.2.5 கோடி வழங்குறேன்.. மலாலா அறிவிப்பு

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (21:24 IST)
போரை நிறுத்தினால்  பாலஸ்தீன் மக்களுக்காக இந்திய மதிப்பில் ரூ.2.5 கோடி நிவாரண உதவி வழங்குவதாக நோபல் பரிசு வென்ற   மலாலா யூசுப் தெரிவித்துள்ளார்.
 
பாகிஸ்தானை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் மலாலா இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு உள்ள பாலஸ்தீன் மக்களுக்காக 3 லட்சம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.2.5 கோடி நிதி வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 
 
பாலஸ்தீன் மக்களுக்கு உதவிகளை செய்து வரும் 3 தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த தொகையை அவர் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
 
மேலும் காசாவில் உள்ள மருத்துவமனையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் அதிர்ச்சி அடைந்ததாகவும், இஸ்ரேல் அரசு காசாவில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்
 
 போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தால் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன் மக்களுக்கு 3 3 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்குகிறேன் என்றும் மலாலா தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை! தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் பக்கம் முடக்கம்! இந்தியா அதிரடி..!

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர்.. 6 நாளாச்சு! எப்போ காப்பாத்துவீங்க?? - காங்கிரஸ் கேள்வி!

எதிர்த்து பேசியதால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்.. போலீசில் புகார்

பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரர்.. 6 நாட்களாக மீட்க முடியவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments