Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியப் படையை வெளியேற்றுவோம்: மாலத்தீவு அதிபர் அதிரடி அறிவிப்பு..!

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (16:16 IST)
மாலத்தீவில் இருந்து இந்திய படையை வெளியேற்றுவோம் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்திய படைக்கு பதிலாக சீனாவையோ அல்லது வேறு எந்த நாட்டின் படையையோ மாலதிவுக்குள் அனுமதிக்க மாட்டோம் என மாலத்தீவு அதிபராக பொறுப்பேற்க உள்ள முகமது மூயிஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

மாலத்தீவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிபராக தேர்ந்தெடுக்கபட்ட முகமது மூயிஸ் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவராக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அவர் சீனாவின் ஆதரவாளராக இருந்தாலும் சீன படையையும் தன்னுடைய நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

கடந்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்ற தேர்தலில்  இந்திய ஆதரவாளர் மற்றும் சீன ஆதரவு வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நடந்த நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாளராக அறியப்படும் முகமது சோலீ என்பவர் தோல்வி அடைந்தார். இதனை அடுத்து சீனாவுக்கு ஆதரவாக கருதப்படும் முகமது மூயிஸ் புதிய அதிபராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  அவர் மாலத்தீவில் உள்ள இந்திய படையை வெளியேற்றுவோம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்..! விசாரணை நடத்த வேண்டும் - தலைமை அர்ச்சகர்.!!

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments