Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா நிலவுக்கு செல்கிறது, பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்..!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (17:45 IST)
இந்தியா நிலவுக்கு விண்கலத்தை அனுப்பிம, ஜி 20 மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் ஒவ்வொரு நாடாக சென்று நிதி உதவி கேட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தற்காலிக பிரதமராக லுசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் கக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 
இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர்  நவாஸ் ஷெரீப்  கூட்டம் ஒன்றில் பேசியபோது ’இந்தியா நிலவை அடைந்தும் ஜி 20 உச்சி மாநாடு கூட்டங்களை நடத்தி கொண்டிருக்கும்போது பாகிஸ்தான் பிரதமர் ஒவ்வொரு நாடாக சென்று நிதிக்காக பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். 
 
இந்தியா அடைந்த சாதனைகளை பாகிஸ்தான் ஏன் அடைய முடியவில்லை இதற்கு யார் பொறுப்பு? வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக இருந்தபோது
 
வாஜ்பாய்பிரதமராக  இருந்தபோது, இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு வெறும் ஒரு பில்லியன் டாலர் மட்டுமே. ஆனால் தற்போது இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 600 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
 
 இந்தியா இன்றைக்கு எங்கேயோ சென்றுவிட்டதும் ஆனால், பாகிஸ்தான் உலக நாடுகளிடம் நிதிக்காக கையேந்திக் கொண்டிருக்கிறது என நவாஸ் ஷெரீப் பேசினார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments