Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீட் கொடுக்கல; ஓபிஎஸ்-ம் கண்டுக்கல... கட்சி தாவும் முக்கிய புள்ளிகள்..?

Webdunia
வியாழன், 9 மே 2019 (11:20 IST)
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் அவர் மீதுள்ள அதிருப்தி காரணமாக தினகரன் கட்சியில் இணைய உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
தமிழகத்தில் 18 தொகுதிகளுக்காக இடைத்தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 19 ஆம் தேதி திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 
 
இந்நிலையில் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது அவருக்கு ஆதர்வாக இருந்த சிலர் தற்போது தினகரன் கட்சிக்கு தாவ உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆம், சீட் கிடைக்காத விதக்கிதியில் சிலர் தினகரனுடன் கைக்கோர்க்க உள்ளனராம். 
ஓ.பன்னீர்செல்வத்தால் தனது ஆதரவாளர்களுக்கு எதுவும் செய்ய முடியாது. ஆனால், தனது மகனுக்கு மட்டும் சீட் வாங்க முடியும். மகனுக்கு சீட் வாங்குவதில் காட்டிய ஆர்வத்தை அவர் தனது ஆதரவாளர்கள் மீது காட்டவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனராம். 
 
மேலும் ஜெயலலிதா இருந்தவரை கட்சியில் யாருக்கு வேண்டுமானாலும் சீட் கிடைக்கும். ஆனால் இப்போது சாதியை பார்த்தும், யாருடைய ஆதரவாளர் என்பதை பார்த்தும் சீட் வழங்கப்படுகிறது என தெரிவிக்கின்றன. 
 
இதனால், கடும் அதிருப்திலும் விரக்தியிலும் உள்ள அதிமுகவின் சில முக்கிய புள்ளிகள் அமமுக அல்லது திமுக பக்கம் போய்விடலாமா என சிந்தித்து வருகின்றனராம். இது அதிமுகவிற்கு கடும் பின்னடைவாகவே பார்க்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments