Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சதி! – இம்ரான் கான் பரபரப்பு குற்றச்சாட்டு!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (09:35 IST)
பாகிஸ்தானில் தனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சதி நடப்பதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றிற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் திறமையற்ற ஆட்சியே காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் இம்ரான் கானின் சொந்த கட்சியினரே சிலர் அவருக்கு எதிராக மாறியுள்ளனர்.

இதனால் அவர்மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. 342 இடங்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க 172 உறுப்பினர்கள் தேவை. ஆனால் இம்ரான் கான் கட்சியில் 155 உறுப்பினர்களே உள்ள நிலையில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் தனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சதி நடப்பதாகவும், சில நாடுகள் மறைமுகமாக எதிர்கட்சிகள் மூலமாக தனது அரசை கவிழ்க்கும் வேலையில் ஈடுபடுவதாகவும் இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு.. எங்களை காப்பாற்றுங்கள் என ஐநாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!

சாப்பாடு மட்டுமல்ல, தங்கத்தையும் டெலிவரி செய்யும் ஸ்விக்கி.. இனி வீட்டில் இருந்தே தங்கம் வாங்கலாம்..!

வான்வழியை திடீரென மூடிய இந்தியா: தென்கிழக்கு நாடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் பாகிஸ்தான்..!

26 வருடங்கள் காஷ்மீர் போலீசில் பணிபுரிந்த பாகிஸ்தானியர்.. 8 சகோதரர்களுடன் நாடு கடத்தலா?

இனி போலி பாஸ்போர்ட்டில் ஒருவர் கூட வரமுடியாது: மோடி அரசின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments