Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா மேல் போர் தொடுத்து ரொம்ப கஷ்டப்பட்டோம்! – ஓபனாக சொன்ன பாகிஸ்தான் பிரதமர்!

Pakistan PM
Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (16:02 IST)
பாகிஸ்தானின் தற்போதைய பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் மேற்கொண்ட யுத்தங்களால் பாகிஸ்தான் நெருக்கடிகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மக்கள் பாலிதீன் கவர்களில் எரிவாயுவை நிரப்பி செல்லும் அவலம் எழுந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் பாகிஸ்தானில் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் “ஒரு நாடு அமைதியான முறையில் வாழ்வதும், முன்னேற்றம் அடைவதும் அல்லது சண்டையிட்டு கொள்வதும் இரு நாடுகளின் விருப்பம். முன்னேறுவதா சண்டையிட்டு நேரத்தையும், வளத்தையும் வீணடிப்பதா என்பது நமது கைகளில் உள்ளது.

நாங்கள் இந்தியாவுடன் மூன்று போர்களை நடத்தியுள்ளோம். ஆனால் அவை மக்களுக்கு அதிக துன்பம், வறுமை, வேலையின்மையைதான் கொண்டு வந்தன. போரின் மூலம் நாங்கள் பாடம் கற்றுக் கொண்டோம். அமைதியாக வாழ்ந்து இந்தியாவுடன் உள்ள பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்ள விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைனின் 4 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்.. மக்கள் வெளியேற்றப்பட்டார்களா?

6 மணி நேரம் 583 பேருடன் தொடர்ந்து ஜல்சா..! அடுத்த நொடி கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த சோகம்!

தவெகவினர் ட்ரெண்ட் ஆவதற்காக இப்படி செய்கிறார்கள்!? - வியாசர்பாடி சம்பவம் குறித்து காவல்துறை விளக்கம்!

சென்னை கேளிக்கை பூங்கா ராட்சத ராட்டினத்தில் கோளாறு.. 3 மணி நேரம் அந்தரத்தில் 30 பேர்..!

வங்கக்கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழகத்தில் இன்று ஆரஞ்சு அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments