Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெனாசிர் பூட்டோ படுகொலைக்கு பொறுப்பேற்பதாக தலிபான் அறிவிப்பு

Webdunia
புதன், 17 ஜனவரி 2018 (05:40 IST)
10 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பெனாசிர் பூட்டோவின் படுகொலைக்கு பொறுப்பேற்பதாக தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது

கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பெனாசி பூட்டோவை தீவிரவாதிகள் கொலை செய்தனர். இந்த படுகொலைக்கு தலிபான் தீவிரவாதிகளே காரணம் என அப்போதைய அதிபர் பர்வேஷ் முஷ்ரப் குற்றம் சாட்டியிருந்தபோதிலும் தலிபான் தரப்பில் இருந்து இதனை உறுதி செய்யவில்லை

இந்த நிலையில் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுமன்சூர் ஆசிம் முப்தி நூர் வாலி எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியானது. 588 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் பெனாசிர் படுகொலைக்கு பொறுப்பேற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த பெனாசிர் பூட்டோவின் கழுத்தில் தீவிரவாதி பிலால் என்பவர் துப்பாக்கியால் சுட்டதாகவும் பின்னர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து கூட்டத்தினரை கலைத்ததாகவும் அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெனாசிர் வெற்றி பெற்றால் அவர் அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டு தங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பார் என்று தாங்கள் ஊகித்ததால் அவரை கொலை செய்ததாகவும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

Slot Gacor: Rahasia di Balik Kemenangan Besar yang Bikin Penasaran Hari Ini!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments