Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசாவுக்குள் நுழைய பாலஸ்தீனியர்களுக்கு அனுமதி! 6 பிணை கைதிகள் விரைவில் விடுவிப்பு!

Prasanth Karthick
திங்கள், 27 ஜனவரி 2025 (16:21 IST)

இஸ்ரேல் - பாலஸ்தீன் போரில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீனியர்கள் மீண்டும் காசா செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையீட்டின் பேரில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இஸ்ரேலிய பணைய கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்து வரும் நிலையில், பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வருகிறது.

 

எனினும் இஸ்ரேலிய பணையக்கைதிகளில் முக்கியமானவரான அர்பெல் யாஹுட் என்பவரை ஹமாஸ் விடுதலை செய்யாமல் இருந்து வந்ததால் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றம் சாட்டிய இஸ்ரேல், வடக்கு காசாவிற்குள் பாலஸ்தீன் மக்கள் செல்ல தடை விதித்தது. அதை தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் அர்பெல் யாஹூட் பத்திரமாக இருப்பதாகவும், அவரை சனிக்கிழமை அன்று விடுவிப்பதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது. 

 

இதனால் காசாவிற்குள் பாலஸ்தீன மக்கள் நுழைய இஸ்ரேல் அனுமதித்துள்ளது. இதனால் போர் காரணமாக காசாவை விட்டு சென்ற ஏராளமான மக்கள் மீண்டும் காசா நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

பஹல்காமில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போர்க்குணம் இல்லை! - பாஜக எம்.பி சர்ச்சை கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments