டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

Siva
திங்கள், 28 ஜூலை 2025 (11:52 IST)
அமெரிக்காவில் பயணிகள் விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒருவர் எழுந்து "அமெரிக்காவை அழிப்பேன், ட்ரம்பை கொல்வேன், அல்லாஹு அக்பர்" என்று கோஷமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்தப் பயணி கழிப்பறையிலிருந்து வெளியே வந்தவுடன் முதலில் "அல்லாஹு அக்பர்" என்று கத்தினார். பிறகு, "என்னிடம் வெடிகுண்டு இருக்கிறது, அமெரிக்க அதிபரைக் கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்" என்று அவர் மிரட்டியுள்ளார்.
 
முதலில் அவர் ஜோக் செய்கிறார் என்று பயணிகள் நினைத்த நிலையில், அவர் சீரியஸாக பேசியதால் பெரும் அச்சமடைந்தனர்.
 
பயணியின் அத்துமீறிய நடத்தை காரணமாக விமானி உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். விமானம் தரையிறங்கியவுடன் அந்த நபர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் அமெரிக்க விமான பயணிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மருடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசுவதற்காக ஸ்காட்லாந்தில் இருக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments