Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேன் நெருக்கடி: ராஜரீக தீர்வுக்கு ரஷ்யா சம்மதம்!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (11:24 IST)
ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடி விவகாரத்தில், ராஜரீக முறையிலான தீர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சம்மதம் தெரிவித்துள்ளார். 

 
யுக்ரேன் எல்லைக்கு அருகில் 1,90,000 துருப்புகள் வரை ரஷ்யா நிறுத்தியுள்ளது. யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்க தயாராக உள்ளதாக, மேற்கு நாடுகள் நம்புகின்றன. யுக்ரேன் மீது ரஷ்யா எந்நேரமும் படையெடுக்கலாம் என, அமெரிக்கா தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால், அதனை ரஷ்யா மறுத்துவருகிறது. இதனிடையே, உடனடி படையெடுப்பு குறித்த பேச்சுக்கள் “பொருத்தமற்றது” என, யுக்ரேன் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், இது தொடர்பாக, பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நேற்று (பிப். 20) தொலைபேசியில் உரையாடினார். அப்போது, ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடி விவகாரத்தில், “ராஜரீக முறையிலான தீர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க” ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சம்மதம் தெரிவித்துள்ளதாக, பிரான்ஸ் தெரிவித்துள்ளது. 
 
மேலும், வரும் நாட்களில் யுக்ரேன் – ரஷ்யா இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சந்திப்பு நடத்த புதின் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உரையாடல் குறித்து மாஸ்கோ தரப்பு கூறுகையில், பதற்றத்தை அதிகரித்ததாக, யுக்ரேன் ராணுவம் மீது புதின் குற்றம்சாட்டியதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments