Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராமத்துக்குள் புகுந்து கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு...30 பேர் பலி

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (13:12 IST)
நைஜீரியாவில் ஒரு கிராமத்துக்குள் புகுந்து கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய பல குழுவினர் அரசுக்கும், மக்களுக்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வடமேற்கு மாகாணமான சொகோடாவில் உள்ள ராக்கா, டபாகி  உள்ளிட்ட கிராமங்களில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தி, அப்பாகி மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், ஆயுதம் ஏந்திர குழுவினர் கிராமத்தில் கொள்ளையடிக்கும் நோக்கில் வந்து  மக்கள் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலுக்கு முன் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூடு.. 3 இந்தியர்கள் பலி..!

இந்தியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான் ராணுவம்..!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்: பிரதமர் மோடி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்..!

ஆபரேசன் சிந்தூர் எதிரொலி: இந்திய விமான சேவைகள் ரத்து.. முழு விவரங்கள்..!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி.. நீதி நிலைநாட்டப்பட்டது: இந்திய ராணுவம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments