Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீவ்வில் இருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம்..! – ரஷ்யா அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (15:15 IST)
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் கீவ்வில் இருந்து மக்கள் வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.

ரஷ்ய ராணுவம் உக்ரைன் தலைநகர் கீவ்வில் தீவிர தாக்குதலை நடத்தி வந்தது. இந்நிலையில் இன்று பெலாரஸில் உக்ரைன் – ரஷ்யா இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனால் கீவ்வில் ரஷ்யா போர் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

மேலும் கீவ்வில் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் கீவ்வில் இருந்து கீவ் – வாசில்கிவ் நெடுஞ்சாலை வழியாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த பாதை மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மாவட்டங்களை குளிர்விக்க வருகிறது மழை! இன்றைய மழை வாய்ப்பு!

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments