Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

Mahendran
சனி, 22 மார்ச் 2025 (18:29 IST)
உக்ரைனில் ரஷியா நடத்திய டிரோன் தாக்குதல்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உக்ரைனில் உள்ள ஜபோரிஷ்யா நகரில் நேற்று இரவு நடந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில், உக்ரைனின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் ரஷியாவின் தாக்குதலால் 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும், வடகிழக்கு பகுதியில் உள்ள சுமி  கிராமத்தில்  6 குண்டுகள் வீசப்பட்டதாகவும், இதனால் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், டோனெட்ஸ்க்  பகுதியில் நடந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததோடு, 9 பேர் காயமடைந்தனர் என்று அப்பகுதி ஆளுநர் தெரிவித்தார்.
 
2022ல் தொடங்கிய உக்ரைன்-ரஷியா போர் 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த நிலைமைக்கு முடிவு காண அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமாதான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக, 30 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து சமீபத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
எனினும், இரு நாடுகளும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதல்களை நடத்தி வருவது, சமாதான முயற்சிகளை சிக்கலாக மாற்றியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

ஜம்மு காஷ்மீர் நிலவரம் எப்படி இருக்கு? அமித்ஷாவிடம் கேட்டறிந்த ராகுல் காந்தி..!

விஜய், சீமான், அன்புமணி, பிரேமல்தா கூட்டணி தான் 3வது அணியா? அதிமுக - திமுக கூட்டணிக்கு சிம்மசொப்பனம்?

அடுத்த கட்டுரையில்
Show comments