Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு பிரதமரா இருந்துட்டு இப்படி பண்ணலாமா?...இம்ரான் கானை கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (10:41 IST)
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ட்விட்டர் பதிவு ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவலாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பதிவில் கலில் ஜிப்ரானின் வரிகள் என்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

அந்த புகைபடத்தில் ”நான் தூங்கியபின் கொண்டாட்டமே வாழ்க்கை என்று கனவு கண்டேன். விழித்தபின் சேவை செய்வதே வாழ்க்கை என்று உணர்ந்தேன்.

ஆனால் சேவை செய்தபின் சேவையே கொண்டாட்டமான ஒன்று தான் என்று தெரிந்துகொண்டேன்” என்று எழுதி கீழே கலில் ஜிப்ரான் கூறியதாக குறிப்பிட்டிருந்தது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த பதிவை ட்விட்டரில் பகிர்ந்த பின், அந்த பதிவின் பின்னோட்டத்தில் ஒருவர் “இது கலில் ஜிப்ரானின் வரிகள் அல்ல என்றும், இது ரவீந்திரநாத் தாகூரின் வரிகள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அந்த பின்னோட்டத்தில் ”பாகிஸ்தான் பிரதமராக இருந்துகொண்டு, இப்படி யார் எழுதியது என்று தெரியாமலேயே சமூக வலைத்தலங்களில் பதிவிடலாமா?” என்று கிண்டல் செய்துள்ளார்.

இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் இம்ரான் கானின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டிருக்கிறவர். மேலும் அவரது ட்விட்டர் கணக்கை 9.1 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments