Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்கொரியவிற்கு விருந்து படைக்கும் வடகொரியா....

Webdunia
திங்கள், 5 மார்ச் 2018 (21:58 IST)
வடகொரிய அரசு தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகள் மத்திடில் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில், கடந்த மாதம் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வடகொரியா தனது வீரர்கள், வீராங்கனைகளை அனுப்பி வைத்தது. 
 
இதனால் நீண்ட நாட்களாக இருந்த பகை சற்று சுமூக நிலையை எட்டியுள்ளது. மேலும், வடகொரியா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இயூய்-யாங் தலைமையில் 10 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்திருந்தார்.
 
இந்த குழு, வடகொரியா சென்று அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்து பேசியுள்ளது. அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த கோரி பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். ஆனால், இதற்கு வடகொரியா என்ன பதில் கூறியுள்ளது என தெரியவில்லை. 
 
மேலும், வடகொரியா வந்துள்ள தென்கொரிய பிரதிநிதிகளுக்கு வடகொரிய அதிபர் கிம் இன்று இரவு விருந்து அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments