Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 10 வரை அத்தியாவசிய தேவைக்கு மட்டும் எரிபொருள்! – இலங்கை நெருக்கடி!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (08:13 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகமான நிலையில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் உணவுக்கே அல்லாடிய நிலையில் கொதித்தெழுந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.

இதனால் மகிந்த ராஜபக்சே பதவியிலிருந்து விலகி ரணில் விக்ரமசிங்கெ பிரதமரானார். அதுமுதல் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதே சமயம் பொருட்கள் கிடைப்பதில் கடும் கட்டுப்பாடுகளும் உள்ளன.

தற்போது இலங்கையில் ஜூலை 10ம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 10ம் தேதிவரை நகர்புற கல்வி நிலையங்கள் இயங்காது என்றும், பிற சேவைகளும் முடக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments