Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதார நெருக்கடிக்கு நான்தான் காரணம்! – ஒத்துக்கொண்ட இலங்கை அதிபர்!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (11:55 IST)
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தானே காரணம் என இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே பேசியுள்ளார்.

கடந்த சில மாதங்கள் முன்னதாக இலங்கையில் கரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு எழுந்தது. தொடர்ந்து அத்தியாவசிய உணவுபொருட்களுக்குமே பஞ்சம் எழுந்த நிலையில் மக்கள் வீதிகளில் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் இலங்கை அரசே கவிழும் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளது. நேற்று புதிதாக 17 அமைச்சர்கள் பதவியேற்றனர். இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே “கடந்த இரண்டரை ஆண்டுகளில் கொரோனா தொற்று, கடன் சுமை உள்ளிட்ட பெரிய பிரச்சினைகளை சந்தித்துள்ளோம். மேலும் எங்கள் பக்கத்திலும் சில தவறுகள் உள்ளன.

அதிக விலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது அவர்களின் வலி, கோபம் நியாயமானது. கடந்த காலத்தில் குறைகள் இருந்தாலும் சவால்கள் மற்றும் சிரமங்களை நிர்வகிக்க வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது பொறுப்பு. அந்த பொறுப்பில் இருந்து விலக மாட்டேன் என்று மக்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments