Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்தல.. பத்தல.. சம்பளம் பத்தல! விமானிகள் ராஜினாமா! – அதிர்ச்சியில் பிரபல ஏர்லைன்ஸ்!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (09:02 IST)
சமீபத்தில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசு விமான நிறுவன சேவையும் தற்போது அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக இலங்கையின் அரசியல் சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டது. தற்போது அதிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் இலங்கை அரசின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சிக்கலை சந்திக்க தொடங்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடி, டாலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானிகள் தங்கள் பணிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். கொரோனாவுக்கு முன்பு 318 விமானிகள் அந்நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 235 ஆக குறைந்துள்ளது.

கொரோனாவிலிருந்து உலக நாடுகள் மெல்ல மீண்டு வரும் நிலையில் சுற்றுலாவை முக்கிய வருமானமாக கொண்ட இலங்கைக்கு இப்போதுதான் பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் விமானிகளின் ராஜினாமாவால் அதிகமான விமானங்களை இயக்க முடியாமல் போவது மேலும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

இந்தியா - பாகிஸ்தான் போரை அடுத்து முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments