Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி விடுதியில் திடீர் தீ! - தீயில் 20 பேர் பலி பரிதாப பலி!

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (09:00 IST)
தென் அமெரிக்க நாடான கயானாவில் பள்ளி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மாணவர்கள் பலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான கயானாவின் மஹ்டியா நகரில் பள்ளி ஒன்று விடுதி வசதியுடன் செயல்பட்டு வந்தது. அங்கு ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த விடுதியின் ஒரு அறையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியுள்ளது.

விடியற்காலை நேரத்தில் மாணவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் உஷாராகி வெளியேறுவதற்கு முன்னரே தீ நுழைவு வாயில்களை மூடியுள்ளது. சம்பவமறிந்து அந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் அதற்குள் விடுதியில் சிக்கிய 20 மாணவர்கள் பரிதாபமாக தீயில் கருகி மாண்டனர். 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து பெண்களை தாலியை அறுக்காத அளவுக்கு நான் பார்த்துக்கொள்வேன் என சொன்னார்கள் அது என்ன ஆச்சு- அதிமுக அமைப்பு செயலாளர் சுதா.கே.பரமசிவன் கேள்வி!

திமுகவினர் நடத்திய பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணிக்காக அடி உதை!

மாமன்னன் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி கொடுப்பார் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments