Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீலேயில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ.. உடல்கருகி 46 பேர் பரிதாப பலி!

Prasanth Karthick
ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (09:28 IST)
தென் அமெரிக்க நாடான சீலேயில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயால் பலர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



ஆண்டுதோறும் மார்ச் மாத தொடக்கம் முதல் கோடைக் காலங்களில் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், உலகின் மிகப்பெரும் காட்டுப்பகுதியான அமேசான் காட்டிலும் காட்டுத்தீ ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தற்போது லத்தீன் அமெரிக்க நாடான சீலேயில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

ALSO READ: டிபன் தாமதமானதால் தாயை இரும்புகம்பியால் அடித்து கொன்ற மகன்! பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

யாரும் எதிர்பாராத சமயத்தில் உண்டான இந்த காட்டுத்தீயில் சிக்கி 46 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அப்பகுதியில் இருந்த ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ள நிலையில், 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் மூலமாகவும், விமானங்கள் மூலமாகவும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

சீலேவில் உருவாகியுள்ள இந்த காட்டுத்தீ மேலும் தீவிரமடைந்தால் கோடைக்காலத்தில் அது பல தாக்கங்களை ஏற்படுத்தும் என இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

அடுத்த கட்டுரையில்
Show comments