Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பெருந்தொற்று…. டாப் 10 கோடீஸ்வரர்களின் சொத்து இருமடங்கானது- அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு!

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (09:33 IST)
கொரோனா பெருந்தொற்று காலத்தி உலகின்  முதல் 10 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு இரட்டிப்பாகியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் உலகெங்கும் உள்ள மக்கள் தங்கள் பொருளாதார நிலையில் மோசமடைந்து வரும் நிலையில் கோடீஸ்வரர்களின் வருவாய் மட்டும் குறைவதில்லை. மாறாக இரு மடங்காகியுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் உள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் ஆக்ஸ்பார்ம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுபற்றி பேசப்பட்டுள்ளது.

அதில் ‘உலகின் முதல் 10 கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பாக 70000 கோடி டாலராக இருந்தது. ஆனால் இப்போது 1.5 லட்சம் கோடி டாலராக ஆகியுள்ளது. ஆனால் 99 சதவீதம் மக்களின் வருமானம் குறைந்துள்ளது. உலகில் உள்ள 310 கோடி ஏழை மக்களின் சொத்துகளைவிட 6 மடங்கு இந்த 10 கோடீஸ்வரர்களிடம் இருக்கிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை நான் விரும்பவில்லை: டிரம்ப்

பாகிஸ்தான் போன்ற நாட்டிற்கு அணு ஆயுதம் தேவையா? உலக நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி..!

ரூ.7 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமைத்தொகை எப்படி கொடுக்க முடியும்: ராமதாஸ் கேள்வி..!

எனது உயிருக்கு ஆபத்து.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த கவுதமி..!

குடை ரெடியா? இன்று 4 மாவட்டங்கள்.. நாளை 7 மாவட்டங்கள்! - கனமழை அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments