Webdunia - Bharat's app for daily news and videos

Install App

GPS-ஐ பார்த்துக் கொண்டே காரில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

Sinoj
வியாழன், 1 பிப்ரவரி 2024 (16:54 IST)
தாய்லாந்து நாட்டில் ஜிபிஎஸ்-ஐ பார்த்துக் கொண்டே  காரில் சென்ற பெண் ஒருவருக்கு விபரீதம்   நேர்ந்துள்ளது.

தெரியாத ஊருக்கு செல்பவர்கள் நிச்சயம்  சரியான இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக வேண்டி ஜிபிஎஸ்-ஐ பார்த்துக் கொண்டே செல்வார்கள்.

ஆனால்  சில இடங்களில், சில நேரங்களில் இந்த ஜிபிஎஸ் தொழில்நுட்பம் சொதப்பி விடுவதுண்டு.

இந்த  நிலையில், தாய்லாந்து நாட்டில் ஜிபிஎஸ்-ஐ பார்த்துக் கொண்டே  காரில் சென்ற பெண் ஒருவருக்கு விபரீதம்  ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில் ஒரு பகுதிக்குச் செல்வதற்காகக பெண் ஒருவர் தன் காரில்  GPS- ஐ பார்த்துக் கொண்டே சென்றபோது, தவறுதலாக 120 அடி தொங்கு பாலத்தில் காருடன் மாட்டிக்கொண்டார்.

பின்னர், போலீஸார் உதவியுடன் அவர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து மீட்கப்பட்ட அப்பெண் கூறியதாவது: ஜிபிஎஸ்-ல் மட்டுமே கவனம் செலுத்தியதால் சுற்றிப் பார்க்கவில்லை. அப்பாலம் உறுதியானது என நினைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments