Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனை சேர்ந்த ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை: அதிபர் உத்தரவு

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (07:20 IST)
உக்ரைன் நாட்டை சேர்ந்த ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை என அந்நாட்டு அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது என்பதும் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களில் குண்டு மழை பொழிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்தநிலையில் உக்ரைன் நாட்டு ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் உக்ரைன் நாட்டு ஆண்கள் எல்லோரும் போருக்கு தயாராக வேண்டும் என்றும் போருக்கு தயார் என்று கூறும் கூறி யார் வந்தாலும் அவர்களுக்கு ஆயுதம் வழங்க படும் என்றும் உக்ரைன் அதிபர் கூறியிருந்தார்.
 
 இந்த நிலையில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 18 முதல் 60 வயது வரை ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை என அந்நாட்டின் அதிபர் திடீர் என உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
தலைநகர் கீவ் நகரில் உள்ள மக்களுக்கு பத்தாயிரம் தானியங்கி துப்பாக்கிகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மாவட்டங்களை குளிர்விக்க வருகிறது மழை! இன்றைய மழை வாய்ப்பு!

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments