Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உக்ரைன் மக்களை ரஷ்யா கொல்லப்போகிறது!.. காப்பாத்துங்க!.. அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை...

Advertiesment
ukraine
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் கடந்த ஐந்து வருடங்களாக போர் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தியதில் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு உக்ரைனின் கீவ் நகரம் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்தியது. அப்போது 496 ட்ரோன்கள் மற்றும் 74 ஏவுகணைகளை ரஷ்யா செலுத்தியது..

இதனால் பல குடியிருப்பு கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன.. உக்ரைன் மக்கள் 18 பேர் உயிரிழந்தனர்.. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வருடத்தில் ரஷ்யா நடத்ததில் மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முயற்சி செய்து வருகிறார்.

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகிய இருவரிடமும் அவர் தனது தனி தனியாக தொலைபேசியில் பேசியதாக சொல்லப்படுகிறது.. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்ட்கி தெரிவித்துள்ள கருத்து பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது..

ரஷ்யா பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டு வருகிறது.. உக்கிரன் மக்களை ரஷ்யா கொள்ள விரும்புகிறது.. தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். உக்ரைனில் மக்களின் உயிர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய நட்பு நாடுகளின் உதவி தேவை.. வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணைகளை நட்பு நாடுங்கள் விரைவாக வழங்க வேண்டும்’ என சர்வதேச நாடுகளுக்கு அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ்மாக் பார் உரிமக் காலம் நீட்டிப்பா? இன்று மாலை அமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனை!