Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மியான்மர் போராட்டத்தில் 138 பேர் படுகொலை! – ஐநா சபை கண்டனம்!

World
Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (11:08 IST)
மியான்மரில் ராணுவ ஆட்சி ஏவப்பட்டுள்ள நிலையில் போராட்டம் நடத்திய மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரில் ஜனநாயக முறைப்படி அரசமைத்த ஆங் சான் சூகியின் ஆட்சியை கலைத்து ராணுவம் சர்வாதிகார ஆட்சி அமைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மர் மக்கள் பலர் வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மக்கள் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் மேற்கொண்டு வரும் வன்முறை நடவடிக்கைகளால் மக்கள் பலர் பலியாகியுள்ளனர்.

மியான்மர் நிலவரம் குறித்து பேசியுள்ள ஐ.நா.சபை மியான்மரில் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 138 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மியான்மரில் நடந்து வரும் மனித உரிமை மீறலை உலக நாட்டு உறுப்பினர் எதிர்த்து ஓரணியாக திரள வேண்டும் என ஐ.நா சபை செயலாளரின் செய்தி தொடர்பு துறை அதிகாரி ஸ்டெபானி டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments