Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் 13 பில்லியன் டாலர் முதலீடுகளை குவிக்கும் கூகுள்...

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (20:28 IST)
கூகுளை நினைத்து நம் தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டிய ஒரு  விஷயம் நம் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுளின் சி.இ.ஓ பதவியில் உள்ளதே ஆகும். 
இந்நிறுவனம் இந்த ஆண்டில் அமெரிக்காவில் 13 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய இருப்பதாக சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில் ,நெவேடா டெக்சாஸ் நெப்ராஸ்கா, தெற்கு கரோலினா, விஜீனியா  உள்ளிட்ட இடங்களில் கூகுள் தன் புதிய டேட்டா மையங்கள் மற்றும் அலுவலங்களை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகின்றன.இப்புதிய மையங்களை கட்டுவதன் மூலம் பல்லாயிரம் பேருக்கு வேலைகிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது. சென்ற ஆண்டில் அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக 9 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. 
 
மேலும் கூகுள் நிறுவனத்திற்கென்று அமெரிக்காவில் 21 மாநிலங்களில் மையங்கள் இருப்பதாகவும் இன்னும் 24 மாநிலங்களில் இம்மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments