Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க தலைநகரில் திடீர் துப்பாக்கிச் சூடு! – 10 பேர் பலியானதால் பதற்றம்!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (09:38 IST)
அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிசூடு சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் தலைநகர் வாஷிங்டனில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாகவே துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில் அவ்வபோது சிலர் துப்பாக்கியால் பொதுமக்களை சுடும் சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த வாரம் அட்லாண்டாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்த நிலையில் அதேபோன்ற சம்பவம் வாஷிங்டனிலும் நடந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் துப்பாக்கியோடு புகுந்த நபர் அங்கிருந்த மக்களை சிறை பிடித்துள்ளார்.

இதையறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் திடீரென ஆத்திரமடைந்த ஆசாமி சரமாரியாக சுட்டுள்ளார். இதனால் காவலர் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். ஆசாமியை மடக்கி பிடித்த போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்திற்கு ரூ.2,999 கோடியை விடுவித்தது மத்திய அரசு.. ஆர்ப்பாட்டத்திற்கு கிடைத்த பலன்?

நாடு கடத்தப்பட இருந்த பாகிஸ்தான் நபர் மாரடைப்பால் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

கொளுத்தும் கோடை வெயில்! பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுகிறதா? - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்!

கள்ளக்காதலியின் 16 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை: 45 வயது நபர் கைது..!

இன்று முதல் வி.ஐ.பி. சிறப்பு தரிசனம் நேரம் மாற்றம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments