Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் மளிகைக் கடையில் திடீர் மனிதன்! – துப்பாக்கிசூட்டில் ஒருவர் பலி!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (08:17 IST)
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் மளிகை கடைக்குள் புகுந்த மர்ம நபர் துப்பாகிச்சூடு நடத்தியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் மலிந்துள்ள நிலையில் அடிக்கடி நடக்கும் துப்பாக்கிசூடு சம்பவங்களும், இதனால் பொதுமக்கள் பலியாகும் சோகங்களும் தொடர்ந்து வருகின்றன. சமீபத்தில் இருவருக்கு இடையேயான துப்பாக்கிசூட்டில் 8 வயது சிறுமி பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள மளிகை கடைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments