Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதனுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்! – அமெரிக்காவில் சாதனை!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (16:41 IST)
அமெரிக்காவில் மூளை சாவடைந்த மனிதருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சையில் பன்றியின் சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள என்.ஒய்.யு மருத்துவமனையில் மூளை சாவடைந்த நபர் ஒருவரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்துள்ளது. இதனால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் நோயாளியின் குடும்பத்தினர் அனுமதியை பெற்ற மருத்துவர்கள் அவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தியுள்ளனர்.

முதலில் பன்றியின் சிறுநீரகத்தை அவரது ரத்த நாளங்களுடன் பொருத்தி வெளியே வைத்து பாதுகாத்துள்ளனர். பின்னர் மூன்று நாட்கள் அது சரியாக செயல்படுவதை கண்காணித்த பிறகு உடலில் பொருத்தியுள்ளார்கள்.

இது உறுப்பு மாற்று சிகிச்சையில் ஒரு மைல்கல்லாகவும், லட்சக்கணக்கானோர் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலையில், உறுப்புகளின் பற்றாக்குறையை நீக்கும் வகையிலும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட மாட்டோம், அது எங்கள் வேலையல்ல.. அமெரிக்கா..!

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள்.. இந்தியா பதிலடி.. 3 மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு..!

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments