Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனுக்கு ரூ.3,238 கோடிக்கு அமெரிக்கா ராணுவ உதவி!

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (22:29 IST)
உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மீண்டும் ராணுவ உதவிகள் செய்யவுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்  நாட்டின் மீது உலகப் பெரும் வல்லரசான ரஷியா தொடர்ந்து போரிட்டு வருகிறது. ஒன்பது மாதங்களாக  இப்போர் நடந்து வரும் நிலையில், சமீபத்தில், உக்ரைனில் சில பகுதிகளை தங்கள் பிராந்தியத்துடன் ரஷ்யா இணைத்துக்கொண்ட  நிலையில், உக்ரைனின் கெர்சன் பகுதியில் இருந்து ராணுவத்தினரை வெளியேறும்படி ரஷிய அதிபர் உத்தரவிட்டார். எனவே ரஷிய படைகள் கெர்சன் நகரில் இருந்து வெளியேறிய பின், கெர்சன் நகர் உக்ரைன் ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால்  உக்ரைன் கொடியை ஏற்றினர்.

இந்த நிலையில், ரஷியா என்ற பெரிய நாட்டை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகள் செய்து வருகின்றனர்.

இந் நிலையில், அமெரிக்க நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேல் சல்லிவன், உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது, இந்திய  இந்திய மதிப்பில் ரூ.3.238 கோடி ஆகும்.

ஏற்கனவே அமெரிக்கா, உக்ரைனுக்கு  நிதி உதவி அளித்திருந்த நிலையில், இந்த உதவிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments