Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மக்களுக்கு இனி ரஷ்ய குடியுரிமை! – புதிய ஆணை பிறப்பித்த புதின்!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (08:32 IST)
உக்ரைனில் உள்ள மக்கள் ரஷ்யாவின் குடியுரிமையை பெறுவதற்கான புதிய ஆணையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 150 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில் இருதரப்பு ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தான் கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்க விளாடிமிர் புதின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பிராந்தியங்களில் உள்ள உக்ரைன் மக்கள் ரஷ்ய குடியுரிமை பெறுவதற்கான ஆணை கடந்த 2019ல் கொண்டு வரப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது ரஷ்யா கைப்பற்றியுள்ள உக்ரைன் பகுதிகளில் வாழும் மக்கள் ரஷ்ய குடியுரிமை பெறுவதற்கான புதிய ஆணையில் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments