Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபைனல் ஸ்டேஜில் சோதனை: கொரோனா தடுப்பூசி கிடைப்பது எப்போது?

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (08:15 IST)
கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. 
 
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 36,038,353 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கொரோனாவில் இருந்து 27,144,398 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,054,541 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
மேலும் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிற்கு ஆளான 7,839,414 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. 
 
இது குறித்து சுகாதார அமைப்பின் தலைவர் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 9 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை முயற்சியில் உள்ளன. இவை வெற்றியடையும் பட்சத்தில் இந்த தடுப்பூசிகள் உலக சுகாதார அமைப்பு மூலம் 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் 2 மில்லியன் மக்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி நிச்சயம் தேவைப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என மிகுந்த நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானப்படை அதிகாரி போட்ட நாடகம்.. அம்பலப்படுத்திய சிசிடிவி! - IAF அதிகாரியை கைது செய்ய சொல்லி ட்ரெண்டிங்! என்னதான் நடந்துச்சு?

சென்னையில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து.. பயணிகளுக்கு பாதிப்பா?

கார்கே கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஆளே இல்லை.. கடுப்பில் பதவி பறிப்பு..!

தங்கச்சிக்கிட்டயே தப்பா பேசுவியா? தவெக விர்ச்சுவல் வாரியர் விஷ்ணுவுக்கு தர்ம அடி! - நடந்தது என்ன?

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

அடுத்த கட்டுரையில்
Show comments