Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா இனிமேல்தான் உக்கிரமாக போகுது! – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (13:05 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா இனிதான் வேகமாக பரவ இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா தற்போது உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவி பல லட்சம் உயிர்களை பலிக் கொண்டுள்ளது. மேலும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர உலக நாடுகள் பல ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதால் உலகளவில் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் “கடந்த 1918ல் உலகம் முழுவதும் பரவி 10 கோடி உயிர்களை பலி கொண்ட ஸ்பானிஷ் ப்ளூ வைரஸுக்கு நிகரானது கொரோனா. கொரோனா நோய் தொற்றின் கோரமான பாதிப்புகளை இனிதான் நாம் காண இருக்கிறோம். தற்போது மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பம் இருப்பதால் முடிந்தளவு நம்மை காத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments