Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிபர் மாளிகை சுற்றி வைப்பு: ஏமன் பிரதமர் தப்பியோட்டம்

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (08:00 IST)
ஏமன் நாட்டின் அதிபர் மாளிகை பிரிவினைவாதிகளால் சுற்றி வளைக்கப்பட்டு விட்டதால், ஏமன் பிரதமர் அகமது ஒபைது நாட்டை விட்டு தப்பியோட முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

ஏமன் நாட்டில் அரசுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக பிரிவினைவாதிகளின் கை ஓங்கியுள்ளது. தெற்கு ஏமனை தனியாக பிரித்து சுதந்திரம் வேண்டும் என்று போராடும் பிரிவினைவாதிகளால் பெரும் தொல்லைக்கு ஆளான ஏமன் அரசு, பிரிவினைவாதிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்தது

இதனல் ஆயுதம் ஏந்தி போராடி வரும் பிரிவினைவாதிகள் ஏமன் அதிபர் மாளிகையை சுற்றிவளைத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்தூள்ளது.

இந்த நிலையில் ஏமன் பிரதமர்  அகமது ஒபைது நாட்டை விட்டு தப்பியோட முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஏமன் அதிபர் அபெத் ராப்போ மன்சூர் ஹாதி நாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை. என்றும் கடைசிவரை போராடவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments