Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாயை கடித்து குதறிய இளைஞர்.... கைது செய்த போலீஸ்!

Webdunia
வெள்ளி, 26 ஜனவரி 2018 (09:37 IST)
நாய் மனிதனை கடித்தது என செய்தி வருவ்து வழக்கமான ஒன்றுதான் ஆனால், அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் போலீஸ் நாயை கடித்துவைத்துள்ளார். இதனால் அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
 
அமெரிக்காவில் உள்ள நியூகம்‌ஷயரை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தாங்கள் தங்கு இருந்த குடியிருப்பு பகுதியில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனை பற்றி விசாரிக்க போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 
 
அப்போது இருவரும் தப்பி ஓடி அங்குள்ள வாகன ட்ரெய்லரில் வைக்கப்பட்டிருந்த துணி மூட்டைக்குள் பதுங்கி கொண்டனர். இதனால் போலீஸாரால் அவர்கள் எங்கு மறைந்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
 
எனவே போலீஸ் மோப்பநாயை கொண்டு வந்து இரண்டு இளைஞர்களையும் தேட முயற்சித்தனர். அப்போது ஒரு நபரை நாய் கண்டுபிடித்துவிட்டது. இளைஞரை கடிக்க நாய் முயன்றுள்ளது. இதனால் கோபமடைந்த இணைஞர் அந்த நாயின் தலையை பிடித்து அதன் முகத்தை கடித்து குதறியுள்ளார். 
 
ஆனாலும் அந்த நாய் அவரை விடவில்லை. இறுதியில் அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது நாயை கடித்ததாகவும், தப்பி ஓட முயற்சித்தற்காகவும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments