Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா ஹைப்பர்சானிக் ஆயுதத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துகிறது- அமெரிக்க அறிக்கை

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (23:41 IST)
உலகில் ஹைப்பர்சானிக் தொழில்நுட்பத்தை மேம்படுத்திவரும் நாடுகளில் இந்தியாவும் இருப்பதாக அமெரிக்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
 
அமெரிக்காவின் நாடாளுமன்ற ஆய்வு சேவை என்ற அமைப்பு வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளது.
 
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை மேம்பட்ட ஹைப்பர்சானிக் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. ஆனால், இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் முதலியவையும் ஹைப்பர்சானிக் ஆயுதங்களை மேம்படுத்திவருகின்றன என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
 
ஆஸ்திரேலியா அமெரிக்கக் கூட்டுறவுடனும், இந்தியா ரஷ்யக் கூட்டுறவிலும் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்திவருகின்றன என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
 
இது தவிர, ஹைப்பர்சானிக் தொழில்நுட்ப டெமான்ஸ்ட்ரேட்டர் திட்டத்தின்கீழ் இந்தியா தன் சொந்த ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments