Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி விலகும் வாட்ஸ் ஆப் தலைமை நிர்வாகி..

Webdunia
செவ்வாய், 1 மே 2018 (16:45 IST)
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
 
வத்திக்கான் பொருளாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு:
 
வத்திக்கானின் பொருளாளர் கார்டினல் ஜார்ஜ் பெல், பாலியல் குற்றச்சாட்டு ஒன்றில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வார் என நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
 
இம்மாதிரியான அதிகாரி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வருவது இதுவே முதல்முறை. செவ்வாயன்று தான் குற்றம் ஏதும் செய்யவில்லை என பெல் வாதாடினார். மேலும் தான் தவறுழைக்கவில்லை என தொடர்ந்து கூறி வருகிறார்.
 
அவர் மீது சுமத்தப்பட்ட சில குற்றங்கள் குறித்து விசாரிக்க போதுமான சாட்சியங்கள் இருப்பதாகவும், சிலவற்றிற்கு சாட்சியங்கள் இல்லை எனவும் ஆஸ்திரேலிய நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்துள்ளார்.
 
பதவி விலகுகிறார் வாட்ஸ் ஆப் தலைமை நிர்வாகி:
 
வாட்சப்பின் தலைமை நிர்வாகியும், துணை நிறுவனருமான ஜான் கோம், பணியிலிருந்து விலக போவதாக அறிவித்துள்ளார். முகநூல் பதிவில், தொழில்நுட்பத்துக்கு அப்பாற்பட்டு தான் விரும்பும் சில செயல்களை செய்ய நேரம் எடுத்து கொள்ள போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
தாய் நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனத்திடம் ஏற்பட்ட மோதலே இதற்கு காரணம் என வாஷிங்டன் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்