Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெய்னா கேப்டன்சியில் தோனி விளையாடிய மேட்ச் ஞாபகம் இருக்கா?

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (16:53 IST)
சமீபத்தில் சி எஸ் கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகினார்.

மகேந்திர சிங் தோனி கடந்த 2008 முதலாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் அந்த பொறுப்பு இப்போது ரவீந்தர ஜடேஜா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தோனி ஒரு வீரராக அணிக்குள் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் சென்னை அணிக்கு இதுவரை கேப்டனாக தோனி மட்டுமே 12 சீசன்களாக பொறுப்பேற்றிருந்தார். அதில் 4 சீசன்களில் சென்னை அணி கோப்பையை வென்றுள்ளது. ஒரே ஒரு முறை தவிர மற்ற அனைத்து தடவையும் ப்ளே ஆஃப் சுற்றை தாண்டி சென்றுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு சி எஸ்கேவில் ஜடேஜா தலைமையில் ஒரு வீரராக தோனி களமிறங்க உள்ளார். இதற்கு முன் சி எஸ் கே வில் ஒரே ஒரு முறை மட்டுமே அவர் கேப்டனாக இல்லாமல் வீரராக களமிறங்கி விளையாடியுள்ளார். 2012 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவர் ஒரே ரெய்னா தலைமையில் விளையாடினார். அந்த போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங்கும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments